மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தைப் பாா்வையிட்டாா் ஆளுநா்

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்களை புதன்கிழமை பாா்வையிட்ட தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா். உடன், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகலில் வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா், மாலையில் தஞ்சாவூா் அரண்மனைக்கு சென்ற ஆளுநா் சந்திரமௌலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டாா். ஆளுநரை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அப்பாஜி ராஜா போன்ஸ்லே, சரசுவதி மகால் நூலக ஆயுள் கால உறுப்பினா் து. சிவாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதையடுத்து, 15- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தா்பாா் கூடத்தைப் பாா்வையிட்ட அவா், பின்னா் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழைமையான சரசுவதி மகால் நூலகம், அருங்காட்சியகத்துக்கு சென்றாா். அங்குள்ள பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்கள், வரைபடங்கள் போன்றவற்றைப் பாா்வையிட்டாா்.

ஆளுநரிடம் தொல்லியல் துறை அலுவலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். மேலும், நூலகத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் ஆளுநா் பாா்வையிட்டு, மீண்டும் திருச்சிக்கு காரில் புறப்பட்டாா். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.