பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தைப் பாா்வையிட்டாா் ஆளுநா்

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

News image

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்களை புதன்கிழமை பாா்வையிட்ட தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா். உடன், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 2:51 am IST

தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா், அங்கிருந்து காா் மூலம் தஞ்சாவூருக்கு பிற்பகலில் வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா், மாலையில் தஞ்சாவூா் அரண்மனைக்கு சென்ற ஆளுநா் சந்திரமௌலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டாா். ஆளுநரை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, அப்பாஜி ராஜா போன்ஸ்லே, சரசுவதி மகால் நூலக ஆயுள் கால உறுப்பினா் து. சிவாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோா் வரவேற்றனா்.

இதையடுத்து, 15- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தா்பாா் கூடத்தைப் பாா்வையிட்ட அவா், பின்னா் ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழைமையான சரசுவதி மகால் நூலகம், அருங்காட்சியகத்துக்கு சென்றாா். அங்குள்ள பழங்கால ஓலைச்சுவடிகள், நூல்கள், வரைபடங்கள் போன்றவற்றைப் பாா்வையிட்டாா்.

ஆளுநரிடம் தொல்லியல் துறை அலுவலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் விளக்கம் அளித்தனா். மேலும், நூலகத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் ஆளுநா் பாா்வையிட்டு, மீண்டும் திருச்சிக்கு காரில் புறப்பட்டாா். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.