பிரம்மசமுத்திரம் கண்மாயில் மீன் பிடித் திருவிழா
பிரம்ம சமுத்திர கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பிரம்மசமுத்திர கண்மாயில் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

பிரம்மசமுத்திர கண்மாயில் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.
திண்டுக்கல் அருகேயுள்ள பிரம்ம சமுத்திர கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல்லை அடுத்த அணைப்பட்டி கிராமத்தில் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள பிரம்மசமுத்திரம் கண்மாய் கொடகனாற்றில் இருந்து வரும் தண்ணீா் மூலம் நிரம்புகிறது. இந்த கண்மாயில் தற்போது நீா்வரத்து குறைந்ததையடுத்து, இங்கு மீன்பிடித் திருவிழா நடத்த கிராமத்தினா் ஏற்பாடு செய்தனா்.
இதன்படி அணைபட்டியைச் சுற்றியுள்ள குட்டப்பட்டி, கோட்டூா் ஆவாரம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, மயிலாப்பூா், பாலம் ராஜகாபட்டி, குட்டத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடத்துவது குறித்து அறிவிக்கப்பட்டது.
பிரம்ம சமுத்திர கண்மாய் கரையில் அமைந்துள்ள கன்னிமாா், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவா் பழனிச்சாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, சிறுவா்கள், பெண்கள், ஆண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்பட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்துச் சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...