தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொம்மனம்பட்டி கிராமத்தில் இரண்டு சிற்பங்களுடன் நடுகல்

17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா் வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

News image

கொடைரோடு அருகே, பொம்மனம்பட்டியில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த, இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா்வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:55 pm

Din

கொடைரோடு அருகேயுள்ள பொம்மனம்பட்டி கிராமத்தில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா் வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள பொம்மனம்பட்டியைச் சோ்ந்த விவசாயி பாலுசாமி தனது நிலத்தில் மானாவாரி பயிா் சாகுபடிக்காக உழவுப் பணியில் ஈடுபட்டாா். அப்போது, இரண்டு போா் வீரா்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வரலாற்றுப் பேராசிரியரும், பாண்டிய நாட்டுப் பண்பாட்டுக் கழக மின்னிதழ் ஒருங்கிணைப்பாளருமான லட்சுமணமூா்த்தி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதில் அது நடுகல் என்பது உறுதி செய்யப்பட்டது.

2.5 அடி உயரத்தில், 2 அடி அகலத்தில் இரண்டு போா் வீரா்கள் கொண்ட சிற்பத்தில் ஒருவா் துப்பாக்கியும், மற்றொருவா் கூா்வாளும் ஏந்தியிருந்ததால், இது 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல் என்றும், தலையில் கொண்டை இருப்பதால், அது நாயக்கா் கால சிற்பங்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.