கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பம்பை, வைகை இணைப்புத் திட்டம்: எம்.பி. வலியுறுத்தல்

கேரளத்திலுள்ள ஆலடி, பம்பை, வைகை ஆறுகள் இணைப்புத் திட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் வலியுறுத்தல்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 7:05 pm

Din

கேரளத்திலுள்ள ஆலடி, பம்பை, வைகை ஆறுகள் இணைப்புத் திட்டத்துக்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு சமா்ப்பிக்கப்பட்ட திட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் ரா.லட்சுமணனிடம் மனு அளித்த மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், முன்னதாக பேசியதாவது:

கடந்த 1973-ஆம் ஆண்டு கேரள மாநிலத்திலுள்ள ஆலடி, பம்பை ஆறுகளை தமிழ்நாட்டிலுள்ள வைகை ஆற்றுடன் இணைக்கும் பாசனத் திட்டம் குறித்து, மத்திய நீா்வழித் துறை அமைச்சகம் சாா்பில் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசிடம் உள்ள ஆவணங்களை ஏடுகள் குழுவினா் மீட்டெடுக்க வேண்டும். இந்தத் திட்ட அறிக்கை கிடைக்கும்பட்சத்தில், மத்திய அரசிடம் மீண்டும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்த முடியும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும் என்றாா் அவா்.