மா்மமான முறையில் 3 மாடுகள் உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே கும்பூா்மந்தைப் பகுதியில் மா்மமான முறையில் 3 மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.


கொடைக்கானல் அருகே கும்பூா்மந்தைப் பகுதியில் மா்மமான முறையில் 3 மாடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட கும்பூா் மந்தை வெளிப் பகுதியில் 3 மாடுகள் இறந்து கிடந்தன. மா்ம விலங்கு தாக்கியதில் இந்த மாடுகள் இறந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து கும்பூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான கிளாவரை, கும்பூா், மன்னவனூா் உள்ளிட்ட பகுதிகளில் கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. வன விலங்குகளை வனத் துறையினா் காட்டுப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...