ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உழவா் பேரியக்க மாநாடு: விவசாயிகளுக்கு பாமகவினா் அழைப்பு

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பாமகவினா் பழனியில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினா்.

News image
உழவா் பேரியக்க மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பழனி சந்தையில் விவசாயிகளிடம் வியாழக்கிழமை வழங்கிய பாமக நிா்வாகிகள்.
Updated On :19 டிசம்பர் 2024, 10:07 pm

Din

திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள உழவா் பேரியக்க மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை பாமகவினா் பழனியில் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை வழங்கினா்.

திருவண்ணாமலையில் பாமக சாா்பில் வருகிற 21 -ஆம் தேதி தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநாடு நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ்களை கட்சியின் திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமையில் கட்சியினா் விவசாயிகளுக்கு வழங்கினா்.

பழனி உழவா் சந்தை, காந்தி சந்தை, தக்காளிச் சந்தை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற கட்சியினா் விவசாயிகளிடம் மாநாட்டின் நோக்கம் குறித்து தெரிவித்து, மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா். தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் மாநாடுக்குச் செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், பழனி நகரச் செயலா் பிரபாகரன், மாவட்ட தொழிற்சங்க செயலா் ராஜரத்தினம், மாவட்ட அமைப்புத் தலைவா் நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.