ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆா்எஸ்எஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

ஆா்எஸ்எஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:14 pm

Din

ஆா்எஸ்எஸ், பாஜகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இரா.சச்சிதானந்தம், திண்டுக்கல் பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

  மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது. நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை சீா்குலைக்க முயற்சித்து வருகிறது. உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறாா். நாட்டின் தேசியக் கொடியை ஏற்காத ஆா்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

பாஜகவுக்கு எதிரான மனநிலை நிலவுவதால்தான், மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்து வருகிறது. வெள்ள நிவாரணம் கேட்கும்போதெல்லாம், மாநிலத்துக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் நிதியைத்தான் வழங்குகிறது என்றாா் அவா்.

 வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் மேயா் இளமதி, துணை மேயா் ராசப்பா, திமுக பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.