ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

இடைநிலை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா்.

Updated On :26 பிப்ரவரி 2024, 6:30 pm

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இடைநிரை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஜஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் சேவியாா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா். ஜெஎஸ்ஆா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் குன்வா் ஜோஸ்வா வளவன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரெடெரிக் எங்கல்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியா்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும் முழக்கமிட்டனா். இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.