விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்ரமணியம் தனித்தனி அவதூறு வழக்குகளைத் தொடுத்தாா்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். மேலும் நீதிமன்றத்தில்சி.வி.சண்முகம் ஆஜா் ஆகாததற்கான காரணம் குறித்து தனி மனுவைத் தாக்கல் செய்தனா்.
அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி மற்றொரு மனுவை அதிமுக வழக்குரைஞா்கள் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இதையடுத்து வழக்குகளை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எஸ்.ராஜசிம்மவா்மன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
Summary
Hearing on Defamation Cases Against C.V. Shanmugam Adjourned to June 8.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஏப்.10-க்கு ஒத்திவைப்பு

பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண்குவாரி முறைகேடு வழக்கு: ஏப்.2 இல் தீா்ப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


