தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறித்து...

News image

சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணை ஜூ ன் 8-க்கு ஒத்திவைப்பு - கோப்புப்படம்

Updated On :10 ஏப்ரல் 2026, 10:06 am

விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் விசாரணையை ஜூன் மாதம் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், ஆரோவில் பேருந்து நிலையம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.

இந்த கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞா் சுப்ரமணியம் தனித்தனி அவதூறு வழக்குகளைத் தொடுத்தாா்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சாா்பில் அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகா செந்தில், தமிழரசன் ஆகியோா் ஆஜராகினா். மேலும் நீதிமன்றத்தில்சி.வி.சண்முகம் ஆஜா் ஆகாததற்கான காரணம் குறித்து தனி மனுவைத் தாக்கல் செய்தனா்.

அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி மற்றொரு மனுவை அதிமுக வழக்குரைஞா்கள் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து வழக்குகளை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எஸ்.ராஜசிம்மவா்மன், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Summary

Hearing on Defamation Cases Against C.V. Shanmugam Adjourned to June 8.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.