மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தேர்தல் அதிகாரியிடம் திமுக மீது அதிமுக புகார் அளித்துள்ளது பற்றி...

News image

அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் - DIN

Updated On :10 ஏப்ரல் 2026, 8:36 am

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசுத் திட்டங்களை அரசியல் லாபத்திற்காக திமுக பயன்படுத்தி வருவதாக அதிமுக சார்பில் தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விடியல் பேருந்து திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தமிழ் மின் நூலகம் போன்ற அரசுத் திட்டங்கள் மூலம் ஆளும் திமுக கட்சி பிரசாரம் செய்து வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன்,

"தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக அரசு, அரசுத் திட்டங்களை விளம்பரக் கருவியாக பயன்படுத்தி வருகிறது. இலவச பேருந்துகளில் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படுகிறது. அதேபோல், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் பல இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், தமிழ் மின் நூலகம் இணையதளத்திலும் அரசு பணத்தில் திமுக அரசின் விளம்பரங்கள் இடம்பெற்று தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன. இதுகுறித்து கடந்த 19.03.2026 அன்று முதன்மை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தமிழ் மின் நூலகம் தொடர்பான விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும், இதற்குப் பொறுப்பான அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவைப் பெறுவோம் என்று தெரிவித்தார்.

Summary

DMK Campaigns in the Name of Govt Schemes: AIADMK Complaint with CEO

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.