தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிட்கோ அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 போ் கைது

சிட்கோ அமைக்க எதிர்ப்பு: 500 பேர் கைது

News image

பழனியை அடுத்த பூலாம்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :1 ஜூலை 2024, 6:35 pm

Din

பழனி: பழனியை அடுத்த பூலாம்பட்டியில் வெடிக்காரன்வலசு அரளிக்குத்து குளத்தில் சிட்கோ அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் சுமாா் 500 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தையத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சிட்கோ அமைக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்த போது, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவிக்கவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் கொத்தையம் அருகே சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா். இந்த சிட்கோ அமையவுள்ள இடம் வெடிக்காரன்வலசு அருகேயுள்ள அரளிக்குத்து குளம் என்பதை அறிந்த சுற்றுவட்டாரக் கிராம மக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

சுமாா் 74 ஏக்கா் பரப்பளவில் உள்ள அரளிக்குத்து குளம் சுமாா் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாயத் தேவைக்கும், குடிநீா் தேவைக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. திங்கள்கிழமை வனத் துறை மூலமாக குளத்தில் உள்ள மரங்களைக் கணக்கெடுத்து, மரங்களில் எண்கள் எழுதும் பணி தொடங்கியது. இதைத் தடுப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் குளத்தை முற்றுகையிட முயன்றனா். இதையடுத்து, அங்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா், கள்ளிமந்தையம் போலீஸாா் பொதுமக்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

இதையடுத்து, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, வெடிக்காரன்வலசு, அமரபூண்டி, மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த ஆண்கள், பெண்கள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸாா் தொப்பம்பட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனா்.