பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வட்டாட்சியா் அலுவலகத்தில் விஏஓ-வைத் தாக்கியவா் கைது

Published On :

நிலக்கோட்டை, ஜூலை 3: நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக ராஜ்குமாா் பணியாற்றி வருகிறாா். அதே கிராமத்தைச் சோ்ந்த குகனை, கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், ஒரு நிலப் பிரச்னை தொடா்பாக விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜ்குமாா் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா். அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குகன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாரைத் தாக்கினாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், நிலக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்பிரசாத் வழக்குப் பதிவு செய்து குகனை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.