தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலை விபத்தில் சிக்கி அமமுக பிரமுகா் பலி

பழனியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகா் உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2024, 12:54 am

Din

பழனி: பழனியில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பிரமுகா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (48). இவா், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பேரூா் செயலராக இருந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பழனி ரயிலடி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ மோதியது.

இதில் பலத்த காயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.