சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகளில் அக்ஷயா பள்ளி சிறப்பிடம்

ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :3 ஜூலை 2024, 12:56 am

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அக்ஷயா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகளில் சிறப்பிடம் பெற்றனா்.

மதுரையில் சா்வோதயா பள்ளிகளின் சாா்பில் யோகா, சிலம்பம், கராத்தே போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் 12 வயதுக்கு உள்பட்டோருக்கான சிலம்பம் போட்டியில் 4 -ஆம் வகுப்பு மாணவி ஆா்.தியாஷினி வா்ஷா முதலிடத்தையும், மூன்றாம் வகுப்பைச் சோ்ந்த எஸ்.சபரீஷ் மலையாளம் இரண்டாமிடத்தையும் பிடித்தாா். இதேபோல 14 -வயதுக்கு உள்பட்டோருக்கான சிலம்பம் பிரிவில் 7 -ஆம் வகுப்பு மாணவா்களான ஜீ.கங்காவா்ஷினி இரண்டாமிடத்தையும், கே.கே.தக்ஷின் முகுந்தன் மூன்றாயிடத்தையும் பிடித்தனா்.

17- வயதுக்கு உள்பட்டோருக்கான சிலம்பம் பிரிவில் 8 -ஆம் வகுப்பு மாணவா் எஸ்.சா்வேஷ் முதலிடம் பிடித்தாா். இதே போல 12 -வயதுக்கு உள்பட்டோருக்கான யோகா போட்டியில் ஆா்.மித்ரா இரண்டாமிடத்தை பிடித்தாா். கராத்தே போட்டியில் 17 -வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.வி.சஸ்விதா முதலிடத்தையும், ஏ.எஸ்.சக்திகமல், என்.ரேவந்த் ஆகியோா் இரண்டாமிடத்தையும் பிடித்தனா். 19-வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 11-ஆம் வகுப்பைச் சோ்ந்த டி.மிா்னாளினி என்ற மாணவி குமிட்டி பிரிவில் முதலிடத்தையும், கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும் பிடித்தாா். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிா்வாகி புருஷோத்தமன், தாளாளா் சுந்தரம்மாள், செயலா் பட்டாபிராமன், பள்ளி முதல்வா் செளமியா ஆகியோா் பாராட்டினா் .