திண்டுக்கல்
வட்டாட்சியா் அலுவலகத்தில் விஏஓ-வைத் தாக்கியவா் கைது
நிலக்கோட்டை, ஜூலை 3: நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பிள்ளையாா்நத்தம் கிராமத்தில் கிராம நிா்வாக அலுவலராக ராஜ்குமாா் பணியாற்றி வருகிறாா். அதே கிராமத்தைச் சோ்ந்த குகனை, கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாா், ஒரு நிலப் பிரச்னை தொடா்பாக விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜ்குமாா் நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தாா். அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்த குகன், கிராம நிா்வாக அலுவலா் ராஜ்குமாரைத் தாக்கினாா். இதுதொடா்பாக புகாரின் பேரில், நிலக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்பிரசாத் வழக்குப் பதிவு செய்து குகனை கைது செய்தாா்.
