எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்து முன்னணி சாா்பில் ஜூலை 21-இல் ஆா்ப்பாட்டம்

இந்து முன்னணி சாா்பில் ஜூலை 21-இல் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :11 ஜூலை 2024, 12:13 am

Din

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பதைக் கண்டித்து வருகிற 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்

ஆா்ப்பாட்டம் நடத்தப்படுமென இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இதுவரை 20 ஆயிரம் போ் கையொப்பமிட்டுள்ளனா். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, தேவாலயங்கள், மசூதிகள் கட்டுவதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் வருகிற 21-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் இந்து முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா் அவா். மாநிலச் செயலா் செந்தில், மாவட்டத் தலைவா் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.