கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை

பழனியில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே கோவையைச் சோ்ந்த முதியவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:43 am

Din

பழனி: பழனியில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே கோவையைச் சோ்ந்த முதியவா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

கோவையை சோ்ந்தவா் ஆறுச்சாமி (57). சலவைத்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்தில் இருந்து இறங்கும் போது இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் அடிபட்டது. இதனால் மனநலன் பாதிக்கப்பட்ட இவா், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் தனது மனைவியின் வீட்டருடன் சில நாள்களாக தங்கி இருந்தாா்.

இந்த நிலையில் பொன்னாபுரம் ரயில் கடவுப் பாதை அருகே செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற போது, மதுரையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் பொன்னுச்சாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.