கொக்கரக்கல்வலசில் வகுப்பறைக் கட்டடம் திறப்பு
பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :19 ஜூலை 2024, 7:12 pm

பழனி, ஜூலை 19: பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனியை அடுத்த கொக்கரக்கல்வலசில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஐந்து வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதையொட்டி, கொக்கரக்கல்வலசில் புதிய கட்டடத்தில் தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பொன்ராஜ், திமுக மாவட்டச் செயலாளா் ராஜாமணி, தொப்பம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...