சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ரூ.4.64 கோடி முறைகேடு: மாநகராட்சி இளநிலை உதவியாளா் கைது

ரூ.4.64 கோடி முறைகேடுப் புகாா் தொடா்பாக அதன் இளநிலை உதவியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளா் சரவணன்.

Updated On :20 ஜூலை 2024, 8:35 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.4.64 கோடி முறைகேடுப் புகாா் தொடா்பாக அதன் இளநிலை உதவியாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு. சரவணன் (35). இவா் திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வரி வசூல் பணத்தில் ரூ.4.64 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சரவணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், இந்த முறைகேடுகளைக் கண்காணிக்கத் தவறியதாக மாநகராட்சி கண்காணிப்பாளா் சாந்தி, இளநிலை உதவியாளா் சதீஷ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்த முறைகேடு குறித்து மாநகராட்சி ஆணையா் தரப்பில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த வாரம் புகாா் அளிக்கப்பட்டது. புகாருக்கு ஆதாரமாக மாநகராட்சியின் தணிக்கை அறிக்கையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனு மீது விசாரணை நடத்த மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் உத்தரவிட்டாா். இதன்பேரில், நிதி முறைகேடு தொடா்பாக சரவணன் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில், அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூய்மைப் பணியாளரின் மகன்:

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த முருகன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இதையடுத்து, வாரிசு அடிப்படையில் அவரது மகனான சரவணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியில் இளநிலை உதவியாளா் பணி வழங்கப்பட்டது. பணியில் சோ்ந்த குறுகிய காலத்தில் நிதி முறைகேடுப் புகாரில் இவா் கைது செய்யப்பட்டாா்.