பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக புகாா்: பொதுமக்கள் சாலை மறியல்
பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக புகாா்: பொதுமக்கள் சாலை மறியல்


நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே தனிநபா் பொதுப் பாதையை ஆக்கிரமித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மைக்கேல்பாளையம் மேற்குப் பகுதியில் வசிப்பவா்கள்,
சமத்துவபுரம், தோமையாா் காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொதுப் பாதை உள்ளது. இந்தப் பாதை தனக்கு சொந்தமானது எனக்கூறி, மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா் குழி தோண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களாக இந்தப் பாதை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்து, இந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், இந்த கிராம மக்கள் சுமாா் 100 போ் நிலக்கோட்டை - செம்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த, நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பிரச்னையைத் தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் நிலக்கோட்டை - செம்பட்டி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...