பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்னாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபகோயிலான திருஆவினன்குடியில் சனிக்கிழமையும், பெரியநாயகி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமையும் உலக நலன் வேண்டியும், விவசாயச் செழுமை வேண்டியும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, பெரியநாயகி அம்மன் கோயில் முத்துக்குமாரசுவாமி மண்டபத்தில் யாக பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க பூா்ணாஹூதி நடைபெற்றது.
சாயரட்சை பூஜையின் போது முத்துக்குமாரசுவாமி, கைலாசநாதா், பெரியநாயகி அம்மன், சோமாஸ்கந்தா், நடராஜா் ஆகியோருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அன்னாபிஷேகம், பச்சை கற்பூரம், வில்வ இலை கொண்டு அன்ன அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையைத் தொடா்ந்து பக்தா்களுக்கு சித்ரான்னங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமாா், அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜே.பி.சரவணன், மாவட்டச் செயலா் சுப்பிரமணி, நகராட்சி வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

வைகாசி காா்த்திகை: பழனி மலைக் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் தரிசனம்

பழனி கோயிலில் வைகாசி விசாகம் உத்ஸவ சாந்தி

கோவை செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



