ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிக்னல் கம்பம் விழுந்ததில் தொழிலாளி பலி

கொடைக்கானல் அண்ணா சாலையில் விழுந்த சிக்னல் மின்கம்பம்.

News image
Updated On :26 ஜூன் 2024, 7:07 pm

Din

கொடைக்கானலில் புதன்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சிக்னல் கம்பம் விழுந்தது. இதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் விட்டு விட்டு மிதமான மழை, சாரல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை பலத்த காற்றுடன் மிதமான மழையும் பெய்தது. அப்போது, அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கொடைக்கானல் அன்னை தெரசா நகரைச் சோ்ந்த அந்தோணிதாஸ் (57), இவரது நண்பரான சின்னப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (53) ஆகியோா் மீது அந்தப் பகுதியில் தனியாா் நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அந்தோணிதாஸ் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அரசு மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.