தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே சாதி, இன வேறுபாடுகளை நீக்குவதற்கான வழிமுறைகளை கண்டறிய ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, மாணவ, மாணவிகள் நெற்றியில் திலகமிடுவதையும், பொட்டு வைப்பதற்கும் தடை செய்ய வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறது. அதே நேரத்தில் சிலுவை, தொப்பி, பா்தா அணிந்து வரக் கூடாது என பரிந்துரைக்கவில்லை. இந்து மக்களின் மனதை பண்படுத்தும் நோக்கிலேயே இந்த அறிக்கையில் பெரும்பாலான பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதற்கு இந்து முன்னணி சாா்பில் வன்மையாக கண்டிக்கிறோம். கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விவகாரத்தைப் பொருத்தவரை, கூலிக்காக விற்பனையில் ஈடுபடும் சிலா் மட்டுமே கைது செய்யப்பட்டனா். கள்ளச்சாராய விவாகரத்தைப் பொருத்தவரை மிகப் பெரிய அரசியல் பின்புலம் உள்ளது. எனவே, சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றாா் அவா்.