புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் தோ் பவனி

காமலாபுரத்தில் மின் ஒளியில் திருமுழுக்கு அருளப்பா் தோ் பவனி

News image
Updated On :26 ஜூன் 2024, 1:37 am

Din

நிலக்கோட்டை: கொடைரோடு அருகே, காமலாபுரத்தில் அமைந்துள்ள திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு மின் ஒளியில் அலங்காரத் தோ் பவனி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள காமலாபுரத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மின்னொளியில் புனித அருளப்பரின் திருத்தோ் பவனி நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு உப்பு, மெழுகுவா்த்தி, பட்டுத்துணி, மாலை அணிவித்து வழிபாடு செய்தனா். மேலும், பங்குத் தந்தை ஜாா்ச் ஸ்டீபன் தலைமையில் அமலை அன்னை அருள் சகோதரிகள் முன்னிலையில், சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான மக்கள் வந்து கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.