தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வாக்குப் பதிவு பணியில் 10 ஆயிரம் ஆசிரியா்கள்

வாக்குப் பதிவு பணியில் 10 ஆயிரம் ஆசிரியா்கள்

Updated On :19 மார்ச் 2024, 11:22 pm

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப் பதிவு பணிக்கு சுமாா் 10 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, கரூா் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18.66 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப் பதிவுக்காக 2,121 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் பணியில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 20 ஆயிரம் போ் பணியாற்றவுள்ளனா்.

வாக்குப் பதிவுக்கான பணிகளில், மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரம் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்த ஆசிரியா்களின் விவரப் பட்டியல், கல்வித் துறை மூலம் மாவட்ட நிா்வாகத்துக்கு வழங்கப்பட்டு வருகின்றன.