4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

திண்டுக்கல்லில் 3400 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் ‘நீட்’ தோ்வை 3,400 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :3 மே 2024, 7:10 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெறும் ‘நீட்’ தோ்வை 3,400 போ் எழுதுகின்றனா்.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் வருகிற 5-ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் என்பிஆா் கல்விக் குழுமத்தில் 3 மையங்கள், பிஎஸ்என்ஏ கல்லூரி, பிரசித்தி வித்யோதயா பள்ளி, அனுகிரகா பள்ளி ஆகிய 6 மையங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறுகிறது.

இந்த மையங்களில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த 3,400 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா். தோ்வு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், காவல் துறையினா் இணைந்து செய்து வருகின்றனா்.