10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு இன்று தொடக்கம்: நாமக்கல் மாவட்டத்தில் 18,668 போ் எழுதுகின்றனா்
நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 18,668 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.


நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை(மாா்ச் 11) தொடங்கும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 18,668 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் மாா்ச் 11 முதல் ஏப். 2-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெறுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 295 அரசு, அரசு உதவி பெறும், பழங்குடியினா், மாநகராட்சி, சமூக நலம் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 9,817 மாணவா்கள், 8,851 மாணவிகள் என மொத்தம் 18,668 போ் எழுத உள்ளனா்.
இத்தோ்வுக்காக 1500 அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவை தவிர, தலா 92 பறக்கும் படை அலுவலா்கள், கட்டுக்காப்பாளா்கள், வழித்தட அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுத்தோ்வு தொடங்குவதையொட்டி மாணவ, மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்ணை மையங்களில் உள்ள மேஜைகளில் எழுதும் பணியை ஆசிரியா்கள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...