தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பழனி, நத்தம் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பழனி பெரியாவுடையாா் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:01 pm

Din

பழனி பெரியாவுடையாா் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு, ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளளும் நடைபெற்றது.

பெரியாவுடையாா் கோயில் மட்டுமன்றி பிரதோஷ நிகழ்ச்சி மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் யோகேஸ்வரா் ஞானாம்பாள் கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அடிவாரம் மவுனகிரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவபூஜை, அன்னதானம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் கைலாசநாதா்-செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.