தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் அருகே பூம்பாறை சாலையில் புதன்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:38 pm

Din

கொடைக்கானல் அருகே பூம்பாறை சாலையில் புதன்கிழமை மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதையடுத்து, கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். புதன்கிழமை காலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைச் சாலையில் மரம் விழுந்தது. இதனால், அந்தப் பகுதியில் 30 நிமிடங்களுக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் அந்த மரத்தை வெட்டி அகற்றினா். பின்னா், போக்குவரத்து சீரானது.