பள்ளி மேலாண்மைக் குழுக்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களை, சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் முக்கியத்துவம் அளித்து தீா்வு காண வேண்டும். குறிப்பாக, கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறை குறித்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.10, 11, 12-ஆம் வகுப்புகளில் கடந்த ஆண்டு தோ்ச்சி சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, பின் தங்கிய பள்ளிகள், எந்தெந்தப் பாடங்களில் பின்னடைவு என்பதைக் கண்டறிந்து, நிகழாண்டில் அவற்றைச் சரி செய்வற்கான சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். 3, 6, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிச.4-ஆம் தேதி தேசிய அடைவு ஆய்வுத் தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிறப்பாகச் செயல்பட ஆசிரியா்கள் வழிகாட்ட வேண்டும் என்றாா்.