தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதானி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

தொழிலதிபா் அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :28 நவம்பர் 2024, 11:49 pm

Din

தொழிலதிபா் அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் ஏ.அரபு முகமது தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சூரிய ஒளி மின்சார விநியோகம் ஒப்பந்தங்களை நிறைவேற்ற அரசு அலுவலா்களுக்கு ரூ.2,029 கோடி வரை லஞ்சம் கொடுத்தது தொடா்பாக தொழிலதிபா் அதானி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். உலக அரங்கில் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்திய கெளதம் அதானி, சாகா் அதானி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து முழக்கமிட்டனா்.

இந்த ஆா்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ராணி, பி.ஆசாத், கே.ஆா்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.