அதானி விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்
தொழிலதிபா் அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.









