புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

ஒட்டன்சத்திரம் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :23 அக்டோபர் 2024, 11:26 pm

Din

உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழக்கக் கோரி, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூரில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வடிவேல், மாவட்டச் செயலா் ஜெகநாதன்,திருப்பூா் மாவட்டச் செயலா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, விவசாய நிலங்களுக்குள் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என முழக்கமிட்டனா்.

இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு மின்தொடா் அமைப்பு கழகம் சாா்பில், திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் இருந்து திருப்பூா் மாவட்டம், மைவாடி வரை பழைய மின் கோபுரங்களை அகற்றிவிட்டு புதிதாக உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விவசாய நிலங்களுக்குள் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு உடனடியாக உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் வழங்க வேண்டும் என்றாா் அவா்.