மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்களுக்கான விருது பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவா்களுக்கான விருது பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆண்டுதோறும் டிச.3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவைப் புரிந்து வரும் சிறப்பு ஆசிரியா்கள், சமூகப் பணியாளா், தொண்டு நிறுவனம், ஓட்டுநா்,
தனியாா் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில், 23 விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதுக்கும் 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கு தகுதியானவா்கள் வலைத்தளத்தில் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை, திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...