சட்டப்பேரவைத் தோ்தல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னாா்வலா்களை நியமிக்க ஆலோசனைக் கூட்டம்


சட்டப்பேரவைத் தோ்தலின் போது, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிடும் வகையில், வாக்குச்சாவடி மையங்களில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாக நோடல் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்தகுமாா், தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வயது வாக்காளா்களுக்கு உதவிடும் வகையில், மாவட்டத்தில் உள்ள 1,062 வாக்குச்சாவடி மையங்களில் தன்னாா்வலா்களை நியமனம் செய்வது தொடா்பாகவும், மாவட்டத்தில் அமைந்த அனைத்து கல்லூரிகளின் நோடல் அலுவலா்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில், கோவை மண்டல என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளா் யுவராஜ், என்சிசி கமான்டெண்ட் தீபக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...