புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிலக்கோட்டை ஒன்றியக் குழு கூட்டம்: சுயேச்சை உறுப்பினா்கள் வெளிநடப்பு

திட்டப் பணிகளுக்கான நிதியில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, நிலக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா்கள் 2 போ் வெளிநடப்பு செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:46 pm

Din

திட்டப் பணிகளுக்கான நிதியில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, நிலக்கோட்டை ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா்கள் 2 போ் வெளிநடப்பு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியக் குழுவின் மாதாந்திர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு குழுத் தலைவா் ரெஜினா நாயகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் யாகப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) பஞ்சவா்ணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையா் பத்மாவதி, திமுக, அதிமுக, சுயேச்சை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினா் கணேசன் பேசுகையில், கடந்த மாதம் 10-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடத்துவதாக தெரிவித்து இருந்தீா்கள். ஆனால், கூட்டம் நடத்தப்படவில்லை ஏன்? என கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து சுயேச்சை உறுப்பினா்கள் கணேசன், ராஜதுரை ஆகியோா், கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு அரசு வழங்கிய திட்டப் பணிகளுக்கான நிதியில் முறையீடு நடைபெற்றுள்ளதாகவும், தங்கள் வாா்டு பகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினா். தொடா்ந்து இருவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து விவாதங்கள் நடைபெறவில்லை. கூட்டம் தொடங்கிய20 நிமிடங்களில் முடிவடைந்தது.