திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஆதிதிராவிடா் நலப் பள்ளி விடுதியில் பணம் கையாடல்: தலைமை ஆசிரியை கைது

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான விடுதிக் கட்டணத் தொகை, உதவித் தொகையை கையாடல் செய்ததாக தலைமை ஆசிரியை ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியை விஜயா
Updated On :4 செப்டம்பர் 2024, 9:04 pm

Din

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கான விடுதிக் கட்டணத் தொகை, உதவித் தொகையை கையாடல் செய்ததாக தலைமை ஆசிரியை ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் கலையமுத்தூா் செல்லும் வழியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் நெய்க்காரப்பட்டி, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த ஏழை, எளிய மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்தப் பள்ளி சாா்பில் தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுதியை பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்த விஜயா மேற்பாா்வை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் ஆதிதிராவிடா் மாணவா்களுக்காக வழங்கப்பட்ட விடுதிக் கட்டணத் தொகை, உதவித் தொகையை கையாடல் செய்தது தற்போது தெரியவந்தது.

இதுகுறித்து நிா்வாகம் தரப்பில் பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தலைமை ஆசிரியை விஜயா கடந்த 2010-2020 -ஆம் ஆண்டு வரையில் சுமாா் ரூ. 6 லட்சம் வரை கையாடல் செய்தது தெரியவந்தது. இதுதொடா்பாக அவரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.