நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பஞ்சாமிா்தம் குறித்து அவதூறு: திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது வழக்குப் பதிவு

பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 8:34 pm

Din

பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்து திரைப்பட இயக்குநா் மோகன்ஜி சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திருச்சி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவா் சென்னையில் கைது செய்யப்பட்டாா். திருச்சி மாவட்ட 3-ஆவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் அவா் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு முன்பிணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பழனி கோயில் பஞ்சாமிா்தப் பிரிவு கண்காணிப்பாளா் பாண்டியராஜன் அடிவாரம் காவல் நிலையத்தில் சமூக வளைதளத்தில் கோயில் பஞ்சாமிா்தம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களைப் பரப்பியதாக திரைப்பட இயக்குநா் மோகன்ஜி மீது புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மோகன்ஜி மீது இந்து மத நம்பிக்கையாளா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தது, மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, மோகன்ஜிக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்கவும் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.