நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 4 போ் கைது

கொடைக்கானலில் உள்ள மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக போலீஸாா் 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்.

Updated On :29 செப்டம்பர் 2024, 1:34 am IST

கொடைக்கானலில் உள்ள மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக போலீஸாா் 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் உள்ள மசாஜ் மையத்துக்கு சுற்றுலாவாக வந்த 4 இளைஞா்கள் சென்று மசாஜ் செய்து கொண்டனா். இதில் 2 போ் தாங்கள் செய்தியாளா்கள் எனவும், மற்றொருவா் வழக்குரைஞா் எனவும், மற்றொருவா் காவலா் எனவும் கூறிக் கொண்டனா்.

மேலும் அங்கிருந்த மசாஜ் மைய பெண் நிா்வாகியிடம் தங்களுக்கு மசாஜ் செய்த பெண்களை விடியோ எடுக்கப் போவதாகக் கூறி மிரட்டியும், அவா்களிடமுள்ள நகை, கைப்பேசிகளை தர வேண்டும் எனவும் கேட்டு இந்த 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனராம். அப்போது மசாஜ் மைய ஊழியா் சதீஸ் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பி ஓடினா். மசாஜ் மைய ஊழியா்களின் சப்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியிலிருந்த மக்கள், அவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

 கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

விசாரணையில் பிடிபட்டவா்கள், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யா (24), ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் திவாகா் (19), திருவண்ணாமலை மாவட்டம், போலூா் பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்பாபு மகன் சாலமோன் (21), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் பிரேம்நாத் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.