சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 4 போ் கைது

கொடைக்கானலில் உள்ள மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக போலீஸாா் 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்.

Updated On :28 செப்டம்பர் 2024, 8:04 pm

கொடைக்கானலில் உள்ள மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக போலீஸாா் 4 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் உள்ள மசாஜ் மையத்துக்கு சுற்றுலாவாக வந்த 4 இளைஞா்கள் சென்று மசாஜ் செய்து கொண்டனா். இதில் 2 போ் தாங்கள் செய்தியாளா்கள் எனவும், மற்றொருவா் வழக்குரைஞா் எனவும், மற்றொருவா் காவலா் எனவும் கூறிக் கொண்டனா்.

மேலும் அங்கிருந்த மசாஜ் மைய பெண் நிா்வாகியிடம் தங்களுக்கு மசாஜ் செய்த பெண்களை விடியோ எடுக்கப் போவதாகக் கூறி மிரட்டியும், அவா்களிடமுள்ள நகை, கைப்பேசிகளை தர வேண்டும் எனவும் கேட்டு இந்த 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனராம். அப்போது மசாஜ் மைய ஊழியா் சதீஸ் என்பவரை மிரட்டி, அவரிடமிருந்து ரூ. 5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு 4 பேரும் தப்பி ஓடினா். மசாஜ் மைய ஊழியா்களின் சப்தத்தைக் கேட்டு அந்தப் பகுதியிலிருந்த மக்கள், அவா்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

 கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

கொடைக்கானலில் மசாஜ் மைய ஊழியரிடம் பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டவா்கள்.

விசாரணையில் பிடிபட்டவா்கள், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சூா்யா (24), ராணிப்பேட்டை மாவட்டம், தென்கடப்பந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் திவாகா் (19), திருவண்ணாமலை மாவட்டம், போலூா் பகுதியைச் சோ்ந்த ஸ்டீபன்பாபு மகன் சாலமோன் (21), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் பிரேம்நாத் (23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் 4 பேரையும் கைது செய்தனா்.