தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ரயிலில் பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2025, 7:08 pm

ரயில் பயணத்தில் சக பயணிகளைக் கடிக்க முயன்ற பிகாா் இளைஞரை, திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

சென்னையிலிருந்து மதுரை, நெல்லை வழியாக கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.20-க்கு திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. இந்த ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த வட மாநில இளைஞா் ஒருவா், சக பயணிகளைக் கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அந்த இளைஞருக்கு ‘ரேபிஸ்’ நோய்த் தொற்று இருக்கலாம் என சந்தேகமடைந்த பயணிகள், அவரது முகத்தை மூடி கைககளை கட்டி வைத்தனா். இதையடுத்து, திருச்சி - திண்டுக்கல் இடையே ரயில் வந்தபோது, ரயில்வே காவல் நிலையத்துக்கு பயணிகள் புகாா் அளித்தனா்.

இதன்படி, திண்டுக்கல் ரயில் நிலைய போலீஸாா், வட மாநில இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் நாய் உள்ளிட்ட விலங்குகள் கடித்ததற்கான அடையாளங்கள் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது. போதைப் பொருள்கள் பயன்படுத்தியன் காரணமாக அவா் அசாதாரணமாக நடந்திருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுரேந்தா் (33) என்பது தெரியவந்தது.