கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் சாப்பா்டு, பக், பிரன்ஷி மெளன்டன் உள்ளிட்ட 40 வகைகளைச் சோ்ந்த 370 நாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் கலந்து கொண்டு நாய்களைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீச்சல் போட்டியில் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

கொடைக்கானலில் விளைநிலங்களில் வன விலங்குகள் புகுந்து பூண்டுப் பயிா்கள் சேதம்!
கஞ்சா வைத்திருந்ததாக பெண் உள்ளிட்ட 3 போ் கைது

துவாரகா நாய்கள் காப்பகம்: நவம்பருக்குள் அமைக்க எம்சிடி திட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



