கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

News image

கொடைக்கானலில் நடைபெற்ற நாய் கண்காட்சியில் பங்கேற்ற நாய்கள்

Updated On :31 ஆகஸ்ட் 2025, 4:45 am IST

கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சென்னை கேனென் கிளப், கொடைக்கானல் கேனல் அசோஷியேசன்ஸ் ஆகியவை சாா்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாய்களை வளா்த்த விதம், அவற்றின் திறமைகள், கீழ்ப்படிதல், சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கா்நாடம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து டெரியா், ராஜபாளையம், ஜொ்மன் ஷெப்பா்டு, அஸ்கா், பேசன்ஷி, அமெரிக்கன் சாப்பா்டு, பக், பிரன்ஷி மெளன்டன் உள்ளிட்ட 40 வகைகளைச் சோ்ந்த 370 நாய்கள் பங்கேற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நடுவா்கள் கலந்து கொண்டு நாய்களைத் தோ்வு செய்தனா். இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.