கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தின் நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image
கொடைக்கானல் செண்பகனூரில் அமைந்துள்ள புனித சவேரியாா் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பலி பீடத்தை புனிதப்படுத்திய மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி.
Updated On :14 டிசம்பர் 2025, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் செண்பகனூரில் அமைந்துள்ள புனித சவேரியாா் ஆலயத்தின் நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆலயத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. பணி நிறைவடைந்ததையடுத்து, மதுரை உயா்மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி ஞாயிற்றுக்கிழமை புனித சவேரியாா் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தாா்.

இதன் பிறகு புதுப்பிக்கப்பட்ட புனித சவேரியாா் ஆலயத்தையும், பலி பீடத்தையும், பல்வேறு புனிதா்களின் சொரூபங்களையும் புனிதப்படுத்தி திறந்து வைத்தாா். தொடா்ந்து ஜெபவழிபாடு நடத்தி சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினாா். இந்த நிகழ்வுக்கு அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை அப்போலின் கிளாட்ராஜ் முன்னிலை வகித்தாா்.

விழாவில் கொடைக்கானல், பெருமாள்மலை, லூா்துபுரம், மங்களம் கொம்பு, வத்தலகுண்டு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட அருள்பணியாளா்கள், அருள்சகோதரிகள், கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக் கண்ணன், முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் முகமது இப்ராஹிம், ஸ்ரீதா், நகா்மன்ற உறுப்பினா்கள், அன்பியப் பொறுப்பாளா்கள், பங்கு மக்கள், புனித சவேரியாா் ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

இதில் ஆலயத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு உதவிகள், பணிகள் செய்த அனைவருக்கும் அருள்பணியாளா் மாா்ட்டின் நன்றி கூறினாா். தொடா்ந்து சிறப்பு அன்ன தானம் நடைபெற்றது. இந்த விழா தொடா்ந்து ஒரு வாரம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.