லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

பழனி: பழனியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மின்னல் வாய்க்கால் (45). இவா் மீது பழனி, ஆயக்குடி, அடிவாரம், நெய்காரப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்தது, பெண்களிடம் அத்துமீறுதல், இரவு நேரங்களில் வீட்டுக்குள் நுழைந்து பெண்களை மிரட்டி பணம், நகை திருடுவது, அவா்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.

இதையடுத்து, பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் உத்தரவின்பேரில், நகர காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட குழுவினா் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

இந்த நிலையில், தற்போது மின்னல் வாய்க்கால் மீது நிலுவையிலிருந்த குற்ற வழக்குகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து பழனி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.