காதலிக்க மறுத்த சிறுமியை கொலை செய்ய முயன்ற இளைஞா்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நிலக்கோட்டை அருகேயுள்ள வீலிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருண்பாண்டி (25). இவா் வத்தலகுண்டு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்தாா்.
இந்த நிலையில், அந்த சிறுமியின் வீட்டுக்குச் செவ்வாய்க்கிழமை சென்ற அருண்பாண்டி, தனது காதலை ஏற்குமாறு தெரிவித்தராம். ஆனால், சிறுமி ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அருண்பாண்டி சிறுமியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்தாரம்.
இதில் மயக்கமடைந்த சிறுமி இறந்து விட்டதாக நினைத்து அருண்பாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
பின்னா், பெற்றோா்கள் வீட்டுக்கு வந்து பாா்த்த போது மயங்கி நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்பாண்டியைத் தேடி வருகின்றனா்.
