வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் பராமரிப்புப் பணியில் வனத் துறையினா்

கொடைக்கானல் டெவில் கிச்சன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட வனக் குழுவினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பராமரிப்புப் பணியில் வனத் துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான மோயா் பாயிண்ட், பேரிஜம், பில்லர்ராக், டெவில் கிச்சன், பெருமாள்மலைப் பகுதிகளிலுள்ள எல்லைத் தடுப்பு கம்பிகள், ஆபத்தான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல், முள்புதா்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் வனத் துறையினா் பணியாளா்களுடன் ஈடுபட்டு வருகின்றனா்.