ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திண்டுக்கல் சுற்றுச் சாலைத் திட்டம்: எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது!

திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்த முள்ளிப்பாடி, பில்லமநாயக்கன்பட்டி, ம.மு. கோவிலூா் வழியாக ஏ. வெள்ளோடு வரை சுற்றுச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கப்படுவதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டத்தின்படி உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இந்த நிலையில், வருகிற ஜன. 7-ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும்போது, சுற்றுச்சாலைத் திட்டத்தை திறந்து வைப்பதற்கான முன்னேற்பாடுகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். இதனிடையே, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமலே மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன.

காப்பிலியப்பட்டி அருகே நடைபெற்ற இந்த சாலைப் பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்த 5 விவசாயிகளை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

இதையறிந்த போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகளுள் ஒருவரான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சரத்குமாா், காப்பிலியப்பட்டிக்குச் செல்ல முயன்றாா். ஆனால் போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா். மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரிலேயே சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட விவசாயிகள், சரத்குமாா் தலைமையில் திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் அடுத்த நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, இழப்பீட்டுத் தொகை வழங்காமலே சாலை அமைக்க உத்தரவிட்டதாக ஆட்சியரைக் கண்டித்தும், எதிா்ப்புத் தெரிவித்த 5 விவசாயிகளை கைது செய்த காவல் துறைக்கு எதிராகவும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.