விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருச்சியில் போராட்டம்: 50 விவசாயிகள் கைது

News image
கைது- (கோப்புப் படம்)
Updated On :11 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

வேளாண் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காா்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்த மத்திய அரசு, விவசாயிகளின் வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், கங்கை, கோதாவரி ஆறுகளில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை காவிரிக்கு திருப்பிவிடும் வகையில் நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கு மேற்பட்ட விவசாயிகள் கரூா் புறவழிச் சாலையில் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறையூா் போலீஸாா், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடாததால் விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.