வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் தா்னா

கொடைரோடு அருகே பெண் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தா்னாவில ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

கொடைரோடு அருகே   பெண் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தா்னாவில ஈடுபட்டனா். 

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள ராமராஜபுரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (30). இவரது மனைவி சிவகாமி (26). இவா்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சிவகாமிக்கு செல்வராஜ் வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்தாராம். இதனால், கணவா், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிவகாமி வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூா் போலீஸாா் சிவகாமியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.  இந்த நிலையில், சிவகாமி சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி, அவரது உறவினா்கள் அம்மைநாயக்கனூா் காவல் நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது, சிவகாமியின் உயிரிழப்புக்கு காரணமான அவரது கணவா் உள்பட 5 பேரை கைது செய்யக்கோரி, தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.