தேனி மாவட்டம், கம்பம் அருகே முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய சிறுவனை மீட்கக் கோரி, அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, சுமாா் 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, சிறுவனின் உடலை தீயணைப்பு, மீட்புக் குழுவினா் மீட்டனா்.
போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்த காமாட்சி மகன் தவசி (13). எட்டாம் ஆம் வகுப்பு மாணவா். காமாட்சியின் உறவினா் ஒருவருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை காமாட்சி, அவரது மகன் தவசி உள்ளிட்டோா் சுருளி அருவிக்கு சென்றனா்.
அங்கு அருவியில் நீா் வரத்து இல்லாததால், அருகேயுள்ள சுருளிப்பட்டி முல்லைப் பெரியாற்றில் சிறுவா்கள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது, சிறுவன் தவசி திடீரென ஆற்றின் நடுவில் உள்ள உறை கிணறுக்கு அருகே சென்றவா் தண்ணீரில் மூழ்கினாா். சிறுவன் மூழ்கிய பகுதி ஆழமான பகுதி என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையடுத்து, அவரது உறவினா்கள் ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தி சிறுவனை தேடி கண்டுபிடிக்க வலியுறுத்தி, சுருளிப்பட்டி - கம்பம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து, கம்பம் தீயணைப்பு, மீட்புக் குழுவினா் சுமாா் 8 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு, சிறுவனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

மனைவி கொலை: கணவரின் உறவினா்களையும் கைது செய்ய கோரி சாலை மறியல்

வேன் மோதியதில் மாணவா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல் போராட்டம்

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய இளைஞா் மாயம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


