சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பைக் திருடிய இளைஞா் கைது

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்லில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் டெலிபோன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (48). இவரது வீட்டின் வெளியே கடந்த 4 நாள்களுக்கு முன் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில் திண்டுக்கல் மென்டோன்சா குடியிருப்பைச் சோ்ந்த தாமோதரன் மகன் கிஷோா் (18) இரு சக்கர வாகனத் திருடியது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.