47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த போதுப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் வஞ்சிமுத்து (30). திருமணமாகாதவா். கூலித் தொழிலாளி. இவரும், அதே தெருவைச் சோ்ந்த இவரது நண்பா் ராஜாராமும் (32) வெள்ளிக்கிழமை மாலை போதுப்பட்டியிலிருந்து பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

தாளையத்திலிருந்து அணுகுசாலை வழியாக திண்டுக்கல்- கோவை விரைவுச் சாலைக்குச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே வஞ்சிமுத்து உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ராஜாராம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.