சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

பழனி அருகே இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்பில் மோதியதில் காயமடைந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த போதுப்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்த ராஜன் மகன் வஞ்சிமுத்து (30). திருமணமாகாதவா். கூலித் தொழிலாளி. இவரும், அதே தெருவைச் சோ்ந்த இவரது நண்பா் ராஜாராமும் (32) வெள்ளிக்கிழமை மாலை போதுப்பட்டியிலிருந்து பழனிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தனா்.

தாளையத்திலிருந்து அணுகுசாலை வழியாக திண்டுக்கல்- கோவை விரைவுச் சாலைக்குச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர தடுப்புக் கம்பியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே வஞ்சிமுத்து உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த ராஜாராம் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com